This is not my kavithaigal...  

விழிகள் வழியாக இதயத்தில்
போர் தொடுத்து
என் காதல் சாம்ராஜ்யத்தின்
சிம்மாசனத்தை வீழ்த்தியவளுக்கு...


இந்த உலகத்தில்
என்னை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கும் உன் நினைவுகள்தான்
என்னை தினம் தினம் கொல்லவும் செய்கின்றன...


என் மூச்சு ஒரு நாள்
அதன் முகவரி தேடி வரும்
அப்போதாவது திறந்து வை
உன் இதயத்தின் கதவுகளை..


எனக்கு மரணம் என்பது உயிரைப் பிரிவதல்ல..
உன்னைப் பிரிவது..


கண்ணீர் விட்டு அழுவது பிடிக்காது உனக்கு
அதனால்தான் கவிதை எழுதி அழுகிறேன்..


நான் எழுதும் எழுத்திலெல்லாம் நீ இருக்கிறாய்..
நீ இருக்கும் எழுத்தைத்தான் நான் எழுதுகிறேன்...


காலம் அழித்துவிடக் கூடியதல்ல உன் நினைவுகள்
அதை உலகம் உணர நான் விட்டுச் செல்வதே இந்த சுவடுகள்..

ஏதேனும் ஒரு நாளில்
ஏகாந்தத்தில் என்னை ஆரூபமாக சந்திக்க நேரிடும்போது
"எப்படி இருக்கிறாய்?" என்று கேட்டுவிடாதே..
உயிர் பிரிந்த பின்பு
யாரும் வாழ்ந்ததாய் சரித்திரம் இல்லை..
இதயத்துடிப்பு நின்ற பிறகும்
இந்த உலகில் இருக்கும் விசித்திரத்தை விட
கொடுமை எதுவுமில்லை..

தலை நரைத்து
தோல் சுருங்கி
தசை தளர்ந்து
பார்வை மங்கி
நினைவுகள் கலங்கி
இறக்கின்ற தண்டனையை
எனக்கு தந்துவிடாதே..
வாழ்கின்ற ஆசை இனி எனக்கில்லை
நீயிலை என்ற கணம்
நானும் இல்லாமல் போயிருந்தால்
கணந்தோறும் தீயில் வேகும்
இந்த வேதனை எனக்கில்லை..

என் நம்பிக்கைகளை தகர்த்து
நம் கனவுகளை சிதைத்து
இந்த இரக்கமற்ற உலகில்
என்னை தனியே விட்டுச் செல்லும் தைரியம்
எங்கிருந்து வந்தது உனக்கு என்று
நான் கேட்கப் போவதில்லை..
எனக்குத் தெரியும்..
இறுதியாய் மூச்சு விட்ட தருணத்தில்
என்னை நினைத்து நீ கலங்கி இருப்பாய் என்று..

பேச நினைத்த வார்த்தைகளும்
பேசாத வார்த்தைகளும்
சேருமிடம் இல்லாமல் அழுதுக் கொண்டிருக்கின்றன
நாம் வாழ நினைத்த வாழ்க்கையை போல..
உன்னை சந்திக்கும் அந்த நாளில்..
இரவும் பகலுமற்ற அந்த உலகில்..
உன் கைகளை இறுக பற்றிக்கொண்டு
அவைகளை எல்லாம்
யுகங்கள் கடந்து பேசப்போகிறேன்..
தேவையான ஓய்வை இப்போதே எடுத்துக்கொள்..
ஏனெனில்
அந்த நாள் வெகு தொலைவில் இல்லை...  

நீயும் சில முத்தங்களும்

உடலின் ஒவ்வொரு இடமும்
ஒளித்து வைத்திருக்கும் இன்பங்களை
தேடித் தேடி மீட்டெடுக்கின்றன..
உன் முத்தங்கள்!!
 
"என்னடா இவன்?!! எப்போது பார்த்தாலும்
முத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறானே?!!" என்று
நினைத்துவிடாதே..
உன் உடலில்
முத்தங்கள் எங்கெல்லாம் இருக்கிறது என்பதை
உதடுகளால் தேடிக்கொண்டிருக்கிறேன்..
அவ்வளவுதான்!!!
 
எனக்குத்தான் நிறைய கிடைத்தது என்றும்
எனக்கு வெட்கப்பட்டுக்கொண்டு அவள் கொடுக்கவே இல்லை என்றும்
என் அங்கங்கள் ஒவ்வொன்றும்
கர்வம் கொண்டும் புலம்பிக்கொண்டும் இருக்கிறது..
ஏன் இந்த பாராபட்சம் உனக்கு?!!!
 
எனக்குத்தான் நிறைய கிடைத்தது என்றும்
எனக்கு வெட்கப்பட்டுக்கொண்டு அவள் கொடுக்கவே இல்லை என்றும்
என் அங்கங்கள் ஒவ்வொன்றும்
கர்வம் கொண்டும் புலம்பிக்கொண்டும் இருக்கிறது..
ஏன் இந்த பாராபட்சம் உனக்கு?!!!
 
உன்னால் மீட்டெடுக்கப்படுவதற்கென்றே
மீண்டும் மீண்டும் தொலைகின்றன
எனக்கு நீ கொடுக்கும் முத்தங்கள்!!
 
எத்தனை கோடிகள் உற்பத்தி செய்தாலும்
அத்தனையும் நானே வாங்கிக் கொள்கிறேன்..
உன் உதடுகளின் முத்தங்கள்!!!
 
ஒவ்வொரு எழுத்தும்
ஒரு இன்பம்
உன் முத்தம்!!
 
கடைசிப்பக்கமே இல்லாத புத்தகம்
உன் முத்தம்!!!
 
நீ முத்தம் கொடுத்த இடங்களையெல்லாம்
பத்திரமாக வைத்திருக்கிறேன்
முத்தங்களை மட்டும்தான் காணவில்லை..
ஆனால் புதிதாக முத்தங்களைக் கொடுக்கும் சிரமத்தை
உனக்குத் தர எனக்கு மனம் வரவில்லை..
அதனால் வழக்கம் போல உன் உதடுகளை எடுத்துக்கொண்டு வந்து
தொலைந்த முத்தங்களை மட்டும்
கண்டுபிடித்துக் கொடு போதும்!!! 

மௌனத்தின் காரணம்

நான் ஏன் எப்போதும் மௌனமாகவே இருக்கிறேன்
என்று கேட்கிறார்கள் எல்லோரும்..
எப்படி சொல்வேன் அவர்களிடம்
என்னுள் இருக்கும் உன்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது
மற்றவர்களுடன் பேசினால்
எ(உ)னக்குப் பிடிக்காது என்று!!