<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.2" -->
<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom">
    <channel>
        <atom:link href="http://mdadam.yolasite.com/tamil-kavithaigal-new/tag/tamil-kavithaigal-new.rss" rel="self" type="application/rss+xml" />
        <title>tamil-kavithaigal-new</title>
        <description>tamil-kavithaigal-new</description>
        <link>http://mdadam.yolasite.com/tamil-kavithaigal-new/tag/tamil-kavithaigal-new.php</link>
        <lastBuildDate>Thu, 04 Jun 2026 02:00:27 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.2</generator>
        <item>
            <title>மறந்திருப்பாயா?!</title>
            <link>http://mdadam.yolasite.com/tamil-kavithaigal-new/tag/tamil-kavithaigal-new/-nov-21-2009-6-55-50-am-50</link>
            <description>&lt;H3 class=smller&gt;மறந்திருப்பாயா?!&lt;/H3&gt; 
&lt;DIV class=para&gt;எல்லோருடனும் பேசிப் பிரிகையில்&lt;BR&gt;எல்லோருக்கும் வார்த்தைகளில் சொல்லிவிட்டு&lt;BR&gt;என்னிடம் மட்டும்&lt;BR&gt;பார்வையால் சொல்லிப் பிரிவாயே...&lt;BR&gt;மறந்திருப்பாயா அதை?!!! &lt;BR&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;BR&gt; 
&lt;DIV class=para&gt;நாம் காதலிப்பதாய்&lt;BR&gt;எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்த காலத்தில்&lt;BR&gt;உன் பெயரைக் கூப்பிட்டால் நானும்&lt;BR&gt;என் பெயரைக் கூப்பிட்டால் நீயும்&lt;BR&gt;திரும்பிக் கொண்டிருந்தோமே...&lt;BR&gt;மறந்திருப்பாயா அதை?!!! &lt;BR&gt;&lt;BR&gt;&lt;BR&gt; 
&lt;DIV class=para&gt;நாம் காதலிப்பதாய்&lt;BR&gt;எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்த காலத்தில்&lt;BR&gt;யதேச்சையாக நாம் இருவரும்&lt;BR&gt;ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தால் கூட&lt;BR&gt;அன்று முழுவதும்&lt;BR&gt;உன் முகம் சிவந்திருக்குமே...&lt;BR&gt;மறந்திருப்பாயா அதை?!!! &lt;BR&gt;&lt;BR&gt;&lt;BR&gt; 
&lt;DIV class=para&gt;நாம் காதலிப்பதாய்&lt;BR&gt;எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்த காலத்தில்&lt;BR&gt;என் நண்பர்களின் குரல் கேட்டாலே&lt;BR&gt;என்னை அங்கு எதிர்பார்த்து சுற்றும்முற்றும் தேடி&lt;BR&gt;என்னைப் பார்த்ததும்&lt;BR&gt;நான் அங்கு இருப்பதையே உணராதவள் போல்&lt;BR&gt;நடந்துக்கொள்வாயே...&lt;BR&gt;மறந்திருப்பாயா அதை?!!! &lt;BR&gt;&lt;BR&gt; 
&lt;DIV class=para&gt;நான் தூரத்தில் இருக்கும்போதெல்லாம்&lt;BR&gt;என்னையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு&lt;BR&gt;சட்டென்று நான் உன்னைப் பார்க்கும்போது திடுக்கிட்டு&lt;BR&gt;பார்வையை என் மேல் இருந்து விலக்கத் தடுமாறி&lt;BR&gt;நீ என்னைப் பார்க்கவில்லை என்று உணர்த்துவதற்காக&lt;BR&gt;ஏதேதோ செய்து&lt;BR&gt;எங்கெங்கோ பார்த்து படாதபாடு படுவாயே...&lt;BR&gt;மறந்திருப்பாயா அதை?!!! &lt;BR&gt;&lt;BR&gt; 
&lt;DIV class=para&gt;நாம் காதலிப்பதாய்&lt;BR&gt;எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்த காலத்தில்&lt;BR&gt;தப்பித்தவறி நீ என் எதிரில் வந்துவிட்டாலும்&lt;BR&gt;ஒரு சின்ன திடுக்கிடலுடன் கூடிய&lt;BR&gt;நாணச்சிரிப்புடன் ஓடி மறைவாயே...&lt;BR&gt;மறந்திருப்பாயா அதை?!!! &lt;BR&gt;&lt;BR&gt;&lt;BR&gt; 
&lt;DIV class=para&gt;அன்றொரு நாள் நான் ஒரு மேடையில் பரிசு வாங்கியபோது&lt;BR&gt;எல்லோரும் கைதட்டி முடித்தபோதும்&lt;BR&gt;ஓயாமல் ஒலித்த உன் கைத்தட்டலுக்கு&lt;BR&gt;சபையே திரும்பிப் பார்த்ததே...&lt;BR&gt;அதை ஒரு நொடி தாமதமாய் உணர்ந்து...&lt;BR&gt;உணர்ந்ததும் சட்டென்று நாக்கைக் கடித்துக்கொண்டு&lt;BR&gt;நாணத்துடன் தலைக்குனிந்தாயே...&lt;BR&gt;மறந்திருப்பாயா அதை?!!! &lt;BR&gt;&lt;BR&gt; 
&lt;DIV class=para&gt;நாம் காதலிப்பதாய்&lt;BR&gt;எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்த காலத்தில்&lt;BR&gt;தினந்தோறும் வகுப்பறையில்&lt;BR&gt;நான் வரும்வரை வாசலையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு&lt;BR&gt;நான் வந்தபின் என் பக்கமே திரும்பாமல்&lt;BR&gt;வேண்டுமென்றே உன் தோழிகளுடன் &lt;BR&gt;பேச ஆரம்பித்துவிடுவாயே&lt;BR&gt;மறந்திருப்பாயா அதை?!!! &lt;BR&gt;&lt;BR&gt;(((நான் வாழ்ந்த தருணங்கள் என்று குறிப்பிடுவது interaction வகையான கவிதைகளை)))&lt;BR&gt;&lt;/DIV&gt;&lt;/DIV&gt;&lt;/DIV&gt;&lt;/DIV&gt;&lt;/DIV&gt;&lt;/DIV&gt;&lt;/DIV&gt;&lt;/DIV&gt;</description>
            <pubDate>Sat, 21 Nov 2009 06:55:50 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>தினம் பூப்பவள்</title>
            <link>http://mdadam.yolasite.com/tamil-kavithaigal-new/tag/tamil-kavithaigal-new/-nov-21-2009-6-48-36-am-36</link>
            <description>&lt;H3 class=smller&gt;தினம் பூப்பவள்&lt;/H3&gt; 
&lt;DIV class=para&gt;நாம் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும்&lt;BR&gt;நான் உன் முகத்தையே கண் விலக்காமல் பார்ப்பேன்...&lt;BR&gt;நீயும் கேட்கிறாய்..&lt;BR&gt;&quot;என்ன இப்போதுதான் புதிதாக பார்ப்பதுப் போல&lt;BR&gt;என்னைப் பார்க்கிறீர்கள்&quot; என்று...&lt;BR&gt;புரியாதவளே...&lt;BR&gt;தினம்தான் பூக்கிறது என்பதற்காக &lt;BR&gt;பூக்கள் அலுத்துவிடுமா என்ன?!!! &lt;/DIV&gt;</description>
            <pubDate>Sat, 21 Nov 2009 06:48:36 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>காதல் கடல்</title>
            <link>http://mdadam.yolasite.com/tamil-kavithaigal-new/tag/tamil-kavithaigal-new/-nov-21-2009-6-46-01-am-1</link>
            <description>&lt;H3 class=smller&gt;காதல் கடல்&lt;/H3&gt; 
&lt;DIV class=para&gt;சுற்றிலும் காதல் கடல் சூழ்ந்திருக்க... &lt;BR&gt;அமைதியாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது&lt;BR&gt;என் இதயக்கப்பலின் பயணம்...&lt;BR&gt;உன் பார்வைப்பட்டு பொத்தலாகும் வரை!!! &lt;/DIV&gt;</description>
            <pubDate>Sat, 21 Nov 2009 06:46:01 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>மௌனத்தின் காரணம்</title>
            <link>http://mdadam.yolasite.com/tamil-kavithaigal-new/tag/tamil-kavithaigal-new/-nov-21-2009-6-43-52-am-52</link>
            <description>&lt;H3 class=smller&gt;மௌனத்தின் காரணம்&lt;/H3&gt; 
&lt;DIV class=para&gt;நான் ஏன் எப்போதும் மௌனமாகவே இருக்கிறேன்&lt;BR&gt;என்று கேட்கிறார்கள் எல்லோரும்..&lt;BR&gt;எப்படி சொல்வேன் அவர்களிடம்&lt;BR&gt;என்னுள் இருக்கும் உன்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது&lt;BR&gt;மற்றவர்களுடன் பேசினால்&lt;BR&gt;எ(உ)னக்குப் பிடிக்காது என்று!! &lt;/DIV&gt;</description>
            <pubDate>Sat, 21 Nov 2009 06:43:52 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>2 Mouna Kathalan</title>
            <link>http://mdadam.yolasite.com/tamil-kavithaigal-new/tag/tamil-kavithaigal-new/2-mouna-kathalan</link>
            <description>&lt;H3 class=smller&gt;மௌனக்காதலன்&lt;/H3&gt; 
&lt;DIV class=para&gt;அன்பே! ஆருயிரே! தேவதையே!&lt;BR&gt;இப்படியெல்லாம் நான் உன்னிடம் சொன்னதில்லை..&lt;BR&gt;ஏன்? எந்த ஒன்றிற்கும் உவமையாக்கி&lt;BR&gt;உன்னை நான் புகழ்ந்ததுமில்லை... &lt;BR&gt;அப்படி எல்லாம் உன்னிடம் நான் சொல்லி இருந்தால்..&lt;BR&gt;நான் உன்னை காதலிப்பது உன் அழகிற்காகத்தான் என்றாகிவிடும்!! &lt;BR&gt;நான் மறுக்கப்போவதில்லை...&lt;BR&gt;உன் அழகும் ஒரு காரணம்தான் நான் உன்னை காதலிப்பதற்கு!!&lt;BR&gt;ஆனால் அழகே காரணம் அல்ல!!!&lt;BR&gt;நான் வார்த்தைகளில் வெளிப்படுத்தாத உன் அழகின் அழகை&lt;BR&gt;மௌனமாக என்னுள் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்... &lt;BR&gt;அன்பே! ஒரு வார்த்தை சொல்..&lt;BR&gt;அந்த வானத்து நட்சத்திரங்களையும் கோர்த்துக் கொடுப்பேன்&lt;BR&gt;உன் கூந்தலுக்கு பூச்சரமாக...&lt;BR&gt;அந்த வெள்ளி நிலவினையும் கிள்ளிக் கொடுப்பேன்&lt;BR&gt;உன் விரல்களுக்கு நகங்களாக... &lt;BR&gt;அந்த சுட்டுப் பார்க்கும் சூரியனையும் உதிர்த்துக் கொடுப்பேன்&lt;BR&gt;உன் நெற்றிக்கு திலகமாக... &lt;BR&gt;அந்த நிலையில்லா வானவில்லையும் நிரந்தரம் ஆக்குவேன்&lt;BR&gt;உன் இரு புருவங்களாக... &lt;BR&gt;அந்த அந்தி மஞ்சள் வானத்தையும் வீழ்த்திக் கொடுப்பேன்&lt;BR&gt;உன் உடலுக்கு போர்வையாக!!! &lt;BR&gt;இப்படியெல்லாம் சொல்லி...&lt;BR&gt;என் நிஜக் காதலை&lt;BR&gt;இந்த கற்பனையான ஜரிகை வார்த்தைகளில் புதைத்துவிட எனக்கு விருப்பம் இல்லை!!&lt;BR&gt;எனென்றால்...&lt;BR&gt;காதலுக்கு விளக்கம் சொன்னவர்கள் கூட&lt;BR&gt;காதலிப்பதற்கு காரணம் சொன்னதில்லை!! &lt;BR&gt;என்றாவது ஒரு நாள் நிச்சயம் உன் கைப்பிடிப்பேன்... &lt;BR&gt;அதுவரையில் மௌனமாகவே காதலிப்பேன் உன்னை!!! &lt;/DIV&gt;</description>
            <pubDate>Sat, 21 Nov 2009 06:40:41 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>New Tamil Kavithaigal</title>
            <link>http://mdadam.yolasite.com/tamil-kavithaigal-new/tag/tamil-kavithaigal-new/new-tamil-kavithaigal</link>
            <description>&lt;H3 class=smller&gt;எனக்கென்று ஒரு முறை&lt;/H3&gt; 
&lt;DIV class=para&gt;உனக்கு நினைவிருக்கிறதா...?!!&lt;BR&gt;நாம் சந்தித்துக்கொண்ட அந்த முதல் நாளில்&lt;BR&gt;நான் உன்னைப் பார்த்தபோது&lt;BR&gt;நீ என்னைப் பார்த்துச் சிரித்தாய்!!!&lt;BR&gt;நீ சிரித்தது என்னைப் பார்த்துதானா&lt;BR&gt;என்பதெல்லாம் எனக்கு இன்றுவரைத் தெரியாது!!!&lt;BR&gt;நீ என்னவோ மெல்லத்தான் சிரித்தாய்..&lt;BR&gt;ஆனால் அதுதான் எதிரொலித்துவிட்டது பலமாக&lt;BR&gt;என் இதயத்தில்!!&lt;BR&gt;அன்று எழுதி வைத்தேன் இப்படி &lt;BR&gt;என் வாழ்க்கையின் முதல் கவிதையாக...&lt;BR&gt;&quot;உனக்கென்ன நீ சிரித்துவிட்டாய்..&lt;BR&gt;உன் கன்னத்துக் குழிக்குள் நானல்லவா&lt;BR&gt;வி&lt;BR&gt;ழு&lt;BR&gt;ந்து&lt;BR&gt;விட்டேன்!!!&quot; &lt;BR&gt;அன்றுவரை வெறுமையை மட்டுமே&lt;BR&gt;வாழ்க்கையாக கொண்டிருந்த என் டயரியின் பக்கங்கள்&lt;BR&gt;பின்னாளில் உன்னைப் பார்த்த நாட்களில் எல்லாம்&lt;BR&gt;நிரம்பிப் போயின உன் நினைவுகளாலேயே!!&lt;BR&gt;உன்னைப் பார்க்காத நாட்களில் எல்லாம்&lt;BR&gt;என் இதயம் சுவாசிப்பது&lt;BR&gt;இந்த டயரியின் பக்கங்களைத்தான்...&lt;BR&gt;அப்போதெல்லாம் நான் நினைத்துக் கொள்வது இதைத்தான்...&lt;BR&gt;நீ வாழும் இந்த பக்கங்களிலேயே நான் புதைந்துவிடக் கூடாதா?!!! &lt;BR&gt;நிறைவேறாது என்று தெரிந்திருந்தும்&lt;BR&gt;இந்த நினைவை என்னால் தவிர்க்க முடிந்தது இல்லை!!&lt;BR&gt;ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்..&lt;BR&gt;இந்த பக்கங்களில் நான் புதையாவிட்டாலும்&lt;BR&gt;இந்த மண்ணில் ஒரு நாள் நான் புதையத்தான் போகிறேன்...&lt;BR&gt;அப்படி நான் புதையும் முன்&lt;BR&gt;எனக்கே எனக்கு என்று&lt;BR&gt;ஒரு முறை என்னைப் பார்த்துச் சிரித்துவிடு!!!&lt;BR&gt;அதுபோதும் எனக்கு...&lt;BR&gt;அந்த மண்ணுக்குள்ளும் நான் சுகமாய் சுவாசிப்பேன்!!! &lt;/DIV&gt;</description>
            <pubDate>Sat, 21 Nov 2009 06:20:23 +0100</pubDate>
        </item>
    </channel>
</rss>
