தினம் பூப்பவள்

நாம் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும்
நான் உன் முகத்தையே கண் விலக்காமல் பார்ப்பேன்...
நீயும் கேட்கிறாய்..
"என்ன இப்போதுதான் புதிதாக பார்ப்பதுப் போல
என்னைப் பார்க்கிறீர்கள்" என்று...
புரியாதவளே...
தினம்தான் பூக்கிறது என்பதற்காக
பூக்கள் அலுத்துவிடுமா என்ன?!!!